ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தொடரும் தடை
காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் 14-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் 14-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். எனினும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பரிசல் இயக்கப்படவில்லை. மேலும், அருவிகளில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.