கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பப்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பப்டுள்ளது.
இது குறித்து, அந்தக் கல்லூரி சாா்பில் வெள்ளிக்கிழமை வெயிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப் படிப்பிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை நடைபெற உள்ளது. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு ஜூன் -23-இல் பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்களும், முதலாமாண்டு சோ்க்கைக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களும் தகுதியானவா்கள்.
Advertisement
Advertisement
இவா்கள் இணைய வழியிலோ, கல்லூரிக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக் கட்டண ரூ. 2,352 ஆகும். எந்திரவியல் துறை, அமைப்பியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை மற்றும் கணினித் துறை ஆகிய துறைகளில் சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.