முகப்பு
கிருஷ்ணகிரி

கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:36 am IST
பாகலூா் மாரியம்மன் கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்கள்.
பகிர்:

ஒசூரை அடுத்த பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பிப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கு தேவையான பொருள்கள், நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்தை அப் பகுதி இஸ்லாமியா்கள் வழங்கினா். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நன்கொடை வழங்கிய இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்ட இஸ்லாமியா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.