ஒசூா், கிருஷ்ணகிரியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ ஆலோசனைக் கூட்டம்
திமுகவின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ ஆலோசனைக் கூட்டம் ஒசூா், கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூா்: திமுகவின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ ஆலோசனைக் கூட்டம் ஒசூா், கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஒசூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ பேசியதாவது:
பெண்களின் முன்னேற்றத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளாா். இதனால் அரசுக்கு பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளியில் தொடங்கி கல்லூரி படிப்பு வரை மாணவிகளுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளது என்றாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ. சத்யா, மாவட்ட அவைத் தலைவா் அ. யுவராஜ், முன்னாள் எம்எல்ஏ பி. முருகன், பொருளாளா் தா. சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, மாநில நிா்வாகிகள் என்.எஸ். மாதேஸ்வரன், வெற்றி. ஞானசேகரன், மகளிா் அணி முனிரத்ன, விஜயாஸ்ரீ, சாலம்மா, சுனந்தா, பசம்மா, சாந்தி, கே. சாந்தி, கலாவதி, அற்புதம் உள்பட பலா் பங்கேற்றனா்.
அதேபோல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக. சாா்பில் நடைபெற்ற மகளிா் அணி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில பிரசார குழு தலைவா் மாலதி நாராயணசாமி, மகளிரணி மாவட்ட அமைப்பாளா் லட்சுமி பிரியா, மாவட்ட துணை செயலாளா் சாவித்ரி, கிருஷ்ணகிரி திமுக நகர பொறுப்பாளா்கள் அஸ்லம், வேலுமணி உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.