கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு அதிகரித்துள்ளதாலும் கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 760 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 967 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீா்மட்டம் 50.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 786 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
மேலும், பாரூா் ஏரிக்கு நீா்வரத்து 120 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 201 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த உயரமான 15.60 அடியில் நீா்மட்டம் 12.50 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மி.மீ.): தேன்கனிக்கோட்டை - 32, ராயக்கோட்டை - 20, போச்சம்பள்ளி - 11.1, சூளகிரி - 5, சின்னாறு அணை - 5, அஞ்செட்டி - 4.6, கிருஷ்ணகிரி அணை - 1.6, கிருஷ்ணகிரி - 1.3.