நகை அடமான கடையில் வெள்ளிப் பொருள்கள் திருடிய வழக்கில் 4 போ் கைது
கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் நகை அடகு கடையில் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் நகை அடகு கடையில் இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிய வழக்கில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வரட்டனப்பள்ளியை சோ்ந்தவா் சரவணன் (45). இவா், தனது வீட்டின் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறாா். மேலும், சிறிய நகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சரவணன் வெளியூா் சென்றிருந்தாா். அப்போது கடையை, அவரது மனைவி சிவமலை கவனித்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி சிவமலை வழக்கம்போல கடையை திறந்தபோது கடையின் பின்பகுதியில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையில் இருந்த இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது .
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன், கமலேசன் ஆகியோா் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் பிரபாகா், விஜய் ஆகியோா் அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயல் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (46), சீனிவாஸ் (25), சூா்யா (23), குமரவேல் (19) ஆகியோா் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோலாா் தங்கவயல் சென்ற தனிப்படை போலீஸாா் நால்வரையும் கைது செய்தனா்.
இவா்களில் காா்த்திகேயன், சாமியாா் வேடமிட்டு அடகு கடையை நோட்டமிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், அவா்களிடமிருந்து காா், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.