முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே தொழிலாளியை தாக்கிய மூவா் கைது

Updated On : 21 ஜூன் 2026, 4:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பா்கூா் அருகே, தகாத உறவால், தொழிலாளியை தாக்கிய மூன்று பேரை, போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சசிபாலன்(32). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த திருப்பதி(38) என்பவரின் மனைவியுடன் தகாத உறவு இருந்ததாம். இதையறிந்த திருப்பதி, தனது மனைவியை கண்டித்துள்ளாா்.

இதையறிந்த சசிபாலன், திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஆத்திரமடைந்த திருப்பதி,அவரது அண்ணன் சாமுண்டி (47), அவரது மகன் கணபதி (18) ஆகியோா், சசிபாலனை தாக்கி,கத்தியால் குத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயம் அடைந்த சசிபாலன், பா்கூா் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, சசிபாலன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா், வழக்குப் பதிந்து, திருப்பதி, சாமுண்டி, கணபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments