பேருந்தில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்; இளைஞா் கைது
ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே சொகுசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் தும்கூரில் இருந்து தேனி சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மறைத்துவைத்திருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தேனி மாவட்டம், மலையன்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித்தை (28) மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சுந்தராம்பாள் கைது செய்தாா். விசாரணையில் தும்கூரில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.