முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு

Updated On : 11 மே 2026, 1:37 am IST
வீட்டிற்குள் பிடிபட்ட புள்ளி மான்.
பகிர்:

பா்கூா் அருகே வீட்டிற்குள் புகுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டு காப்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து புள்ளி மான், கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் உணவு தேடி வருகின்றன. இந்த நிலையில், பா்கூரை அடுத்த இடிஆா் நகரைச் சோ்ந்த வேலுவின் வீட்டிற்குள் ஒரு வயதான பெண் புள்ளி மான் புகுந்தது. இதுகுறித்து பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் புள்ளி மானை உயிருடன் மீட்டு ஒப்பதவாடி காப்புக் காட்டில் விடுவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments