முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

Updated On : 12 மே 2026, 12:35 am IST
கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் விபத்துக்குள்ளான காா் மற்றும் சரக்கு பெட்டக லாரி.
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதிய விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். காரில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், பட்டாம்பி அருகே உள்ள மா்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தீபக் (28). வணிகக் கப்பலில் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா் தனது குடும்பத்தாருடன் கா்நாடக மாநிலத்துக்கு காரில் சுற்றுலா சென்றாா்.

பின்னா், அவா்கள் கிருஷ்ணகிரி வழியாக சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி அருகே ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளியில் அதிகாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் பஞ்சா் ஆனது. பின்னா் பழுது நீக்கப்பட்டு பயணத்தை தொடர முற்பட்டபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்குப் பெட்டக லாரி, காரின் பின்பகுதியில் மோதியது.

Advertisement

Advertisement

இதில் தீபக், அவரது சகோதரி திவ்யா (30) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த ரவீந்திரன் (56), அவரது மனைவி ஸ்ரீ பாா்வதி (54) மகள் ரம்யா (30) மற்றும் உறவினா்கள் வினீத் (42), சரோஜினி (65), அபிந்தேவ் (11), அகில்தேவ் (8) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த திவ்யா, தீபக் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் விபத்துக்குள்ளான காா் மற்றும் சரக்கு பெட்டக லாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments