உண்ணாவிரதமிருந்த 5 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதி
வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து
வாழப்பாடியில் விவசாய நிலங்களுக்கு மேல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 விவசாயிகளின் உடல்நிலை திங்கள்கிழமை இரவு பலவீனமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடியில் கொட்டகை அமைத்து தங்கி 8-ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உண்ணாவிரதமிருந்த விவசாயிகளை திங்கள்கிழமை இரவு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 5 விவசாயிகளின் உடல்நிலை பலவீனமாக காணப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் வாழப்பாடி போலீஸார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.