கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி திங்கள்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி திங்கள்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம், சிஎஸ்ஐ மற்றும் ஐஎன்பி தேவ சபை ஆகிய ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. புனித அந்தோணியர் ஆலய நுழைவு வாயிலில், கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைத்து வருகின்றனர். அதனையடுத்து, கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்துக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு பாடினர். புனித அந்தோணியர் ஆலயத்தின் பங்குத் தந்தை நள்ளிரவு திருப்பலி ஆராதனைகளில் கலந்துகொண்டு பக்தர்களை ஆசீர்வதித்தார். தொடர்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.