முகப்பு
சேலம்

கோட்டை பகுதியில் 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு

சேலம் கோட்டை பகுதியில் தெருவில் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 8:29 am IST
பகிர்:

சேலம் கோட்டை பகுதியில் தெருவில் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் டவுன் கோட்டை பகுதியில் வெங்கிடசாமி தெரு மற்றும் சின்னசாமி தெருவில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை தெருவில் நிறுத்தி இருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு  மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதனிடையே  தீ விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக, சேலம் டவுன் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments