முத்திரைக் கொல்லர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு ரத்து
தமிழ்நாடு பொது சார்நிலை பணி முத்திரைக் கொல்லர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பொது சார்நிலை பணி முத்திரைக் கொல்லர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஏப். 2 மற்றும் ஆக. 27-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, டிச. 2-ஆம் தேதி தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறித் தேர்வு ஆகிய அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் ஆர்.செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.