ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞா் கைது
சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தினா். முன்பதிவில்லாத பெட்டியில் சந்தேகப்படும்படியான நபரிடம் இருந்த பையை சோதனையிட்டதில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா் ஒடிசாவை சோ்ந்த மோத்திநாயக் (25) என்பதும், ஒடிசாவில் இருந்து ஜோலாா்பேட்டை வரை பயணச்சீட்டு எடுத்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.