முகப்பு
சேலம்

ஏற்காடு பூங்காக்களில் குவிந்த காதலர்கள்!

காதலர் தினத்தையொட்டி ஏற்காடு பூங்காக்களில் உள்ள ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்து வருகின்றனர்.

Updated On : 14 பிப்ரவரி 2024, 3:51 pm IST
ஏற்காடு பூங்காக்களில் குவிந்த காதலர்கள்
பகிர்:

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு நவநாகரீக உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றைப் பரிசுப் பொருட்களாகக் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

ஏற்காட்டில் பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இடங்களுக்கு ஏராளமான காதல் ஜோடியினர் குவிந்தனர். அந்த வகையில் இன்று காதலர் தினத்தில் ஏற்காடு பூங்காக்களில் குவிந்துள்ள காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாறும் விதமாக ரோஜா மலர்களைக் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.