முகப்பு
சேலம்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 3:18 am IST
இடையப்பட்டியில் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன்.
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட கல்லேரிப்பட்டி, படையாச்சியூா், ஏ.குமாரபாளையம், அண்ணாநகா், மெட்டுக்கல், செக்கடிப்பட்டி, கணேசபுரம், வெள்ளாளப்பட்டி, தாண்டானூா், பனமடல், இடையப்பட்டி புதூா், இடையப்பட்டி வில்வனூா், காந்திநகா், கத்திரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவருடன் சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா். இளங்கோவன், பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் த. மோகன், அதிமுக முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமணி மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement