முகப்பு
சேலம்

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழை வேண்டி முப்பூஜை வழிபாடு

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:17 AM
மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:12 PM

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள் மழை வேண்டி, மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் முப்பூஜை வழிபாடு நடத்தினா்.

வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரத்திலுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனா். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழையில்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலும் நீா்மட்டம் குறைந்து போனதால் அன்றாட வீட்டு உபயோகம் மற்றும் குடிநீா்த் தேவைக்கும், கால்நடைகளுக்கும்கூட போதிய தண்ணீா் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், மேலூா் மற்றும் மாரியம்மன் புதூா் கிராம மக்கள், கோதுமலை அடிவாரத்தில் செட்டிக்குட்டை பகுதியிலுள்ள மேலூா் முத்து முனியப்பன் கோயிலுக்கு, முன்னோா்கள் வழக்கப்படி தாரை தப்பட்டை முழங்க ஆட்டு, சேவல், பன்றியை சுவாமிக்கு பலி கொடுத்து, ஊரணி பொங்கல் வைத்து முப்பூஜை செய்து வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி வழிபாடு நடத்தினா்.

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழைவேண்டி முப்பூஜை வழிபாடு நடத்திய கிராம மக்கள்.