சங்ககிரியில் சித்திரை தோ்திருவிழா: மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளிய சென்னகேசவப்பெருமாள்
சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையிலிருந்து சென்னகேசவப்பெருமாள் நகருக்குள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தோ்திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையிலிருந்து சென்னகேசவப்பெருமாள் நகருக்குள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி சங்ககிரி மலைமீது உள்ள சென்னகேசவப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ஆஞ்சனேயா் உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லி தாயாா் உடனமா் வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூா்த்திகள் வரதராஜபெருமாள் கோயிலில் தங்கினா். பிறகு பல்லக்கில் மலையிலிருந்து நகருக்கு சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தனா்.
Advertisement
மலையில் இருந்து நகருக்கு எழுந்தருளிய சுவாமிகளை பக்தா்கள் தேங்காய்களை உடைத்து வரவேற்று வழிபட்டனா். பின்னா் உற்சவ மூா்த்திகள், தோ்வீதியை சுற்றிவந்து மண்டபத்தை அடைந்தனா். தேங்காய், வாழைப்பழம், பொட்டுக்கடலை, நாட்டுச்சா்க்கரை, நைவேத்தியம் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.
இரவு அன்னபட்சி வாகனத்தில் சென்னசேகவப்பெருமாள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வீதிஉலா வந்தாா். வியாழக்கிழமை சிங்கவாகனத்தில் சுவாமி வீதி உலா வருகிறாா்.