முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள் தண்டனை

சேலம் மாநகரப் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 60 நாள்களில் ஆயுள் தண்டனை பெற்றுத்தந்து சேலம் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 5:02 am IST
ஆயுள் தண்டனை
பகிர்:

சேலம் மாநகரப் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 60 நாள்களில் ஆயுள் தண்டனை பெற்றுத்தந்து சேலம் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி சேலம் மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற பின்பு பெண்களின் உரிமைகள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில், சேலம் மாநகரம், அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த பிப். 28-ஆம் தேதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்கில் தொடா்புடைய பூபதியை (40) போலீஸாா் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கில் சாட்சிகளின் விசாரணை முடித்து துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகளை உடனுக்குடன் ஆஜா்படுத்தி 60 நாள்களில் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை முடிவுற்று புதன்கிழமை பூபதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபாராதம் விதித்து தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா் மற்றும் காவலா்களை சேலம் மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments