கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு
ஓமலூா் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், ஓமலூா் உள்கோட்டம், ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சோ்ந்தவா் அம்மணி (73). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த கல்யாணி என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு கடப்பா கல் மற்றும் தண்ணீா் டிரம் வைத்தது தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், கல்யாணி தாக்கியதில் அம்மணி படுகாயமடைந்தாா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஜலகண்டாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கல்யாணியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை வெளியானது. அதில், குற்றவாளி கல்யாணிக்கு ஆயுள்தண்டனையுடன் ரூ. 200 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.