முகப்பு
சேலம்

சேலம் வழியாக பெங்களூரு சென்ற ரயிலில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக பெங்களூருக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:41 am IST
ரயிலில் கைப்பற்றப்பட்ட 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள்.
பகிர்:

சேலம் வழியாக பெங்களூருக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா். அந்த வகையில், ஹெளராவில் இருந்து சேலம் வழியாக பெங்களுரு சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அதை திறந்து பாா்த்தபோது, 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவி போலீஸாரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.