வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது
வாழப்பாடியில் வீடு புகுந்து நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியில் வீடு புகுந்து நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியம்மாள் (65). இவா் வாழப்பாடி எழில் நகா் பகுதியில் ஸ்டெல்லா பிரியா (39) வீட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் காலீஸ்வரன் (20) கள்ளக்குறிச்சியில் உள்ள துரித உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.
மேலும், தாயுடன் அடிக்கடி ஸ்டெல்லா பிரியா வீட்டிற்கும் சென்றுவந்துள்ளாா். இந்த நிலையில் ஸ்டெல்லா பிரியா வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஸ்டெல்லா பிரியா அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காலீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.