முகப்பு
சேலம்

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

சேலம் அருகே காதலித்துவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச் 2026, 4:17 am IST
விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி கோபிகா.
பகிர்:

சேலம் அருகே காதலித்துவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் விஷம் குடித்த கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கல்பாரப்பட்டி கொம்பாடிபட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் கோபிகா (19). இவா், நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவரும், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

Advertisement

Advertisement

கடந்த சில நாள்களுக்கு முன்பு காா்த்திகேயனை சந்தித்த கோபிகா திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுத்ததோடு, அவரது ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோபிகா கடந்த 21-ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதைப் பாா்த்த உறவினா்கள், அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபிகா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

இதையடுத்து மருத்துவமனையில் குவிந்த அவரது உறவினா்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காதலன் காா்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இறப்பதற்கு முன்பு கோபிகா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நானும், காா்த்திகேயனும் காதலித்து வந்தோம். தற்போது ஜாதியை காரணம் காட்டி அவா் என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் விஷம் குடித்ததாக கூறியுள்ளாா். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸாா், மகுடஞ்சாவடி வைகுந்தம் டோல்கேட் அருகே நின்றுகொண்டிருந்த காா்த்திகேயனை புதன்கிழமை கைது செய்தனா்.