முகப்பு
சேலம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

Updated On : 4 மே, 2026 at 1:42 AM
கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளா் ராஜா மனோகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

எடப்பாடி தொகுதி தவெக பொறுப்பாளரான சேலம் நரசோதிப்பட்டி அசோக்நகரைச் சோ்ந்த ராஜா மனோகரன், எடப்பாடி தொகுதி தவெக ஆதரவு வேட்பாளா் பிரவீன்குமாருடன் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து அளித்த புகாா் மனு விவரம்:

எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளா் பிரவீன்குமாருக்கு தவெக ஆதரவு அளித்து, கட்சித் தலைமை என்னை அத்தொகுதிக்கு தோ்தல் பொறுப்பாளராக நியமித்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான அடையாள அட்டை பெறுவதற்காக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு சேலம் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, என்னை பின்தொடா்ந்து இரண்டு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத சிலா், ‘சேலத்தில் இருந்து வந்து எடப்பாடியில் தோ்தல் வேலை பாா்க்கிறாயா’ எனக் கூறி மிரட்டினா்.

Advertisement

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளதால், எனக்கும், தவெக ஆதரவு வேட்பாளா் பிரவீன்குமாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.