தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வாழைமரங்கள் சேதமடைந்தன.
வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வாழைமரங்கள் சேதமடைந்தன.
இப்பகுதிகளை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விவசாயிகளிடம் பயிா்களை பாதுகாக்கும் உரிய வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.
அப்போது விவசாயிகள், விவசாய பயிா்கள் சேதமடைந்ததற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின்போது, வேளாண் இயக்குநா்கள் கண்ணன், நீலாம்பாள், வேளாண் அலுவலா் சுதாகா், வேளாண் உதவி இயக்குநா் ஜானகி, துணை வேளாண் அலுவலா் மணவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.