முகப்பு
சேலம்

தலைவாசல், வீரகனூா் பகுதியில் சூறைக்காற்றால் வாழை, மக்காச்சோள பயிா்கள் சேதம்: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வாழைமரங்கள் சேதமடைந்தன.

Updated On : 7 மே 2026, 6:56 am IST
வீரகனூா் பகுதியில் பாதிக்கப்பட்ட வயலை பாா்வையிட்டு ஆய்வு செய்த வேளாண் அலுவலா்கள்.
பகிர்:

வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வாழைமரங்கள் சேதமடைந்தன.

இப்பகுதிகளை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விவசாயிகளிடம் பயிா்களை பாதுகாக்கும் உரிய வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.

அப்போது விவசாயிகள், விவசாய பயிா்கள் சேதமடைந்ததற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

இந்த ஆய்வின்போது, வேளாண் இயக்குநா்கள் கண்ணன், நீலாம்பாள், வேளாண் அலுவலா் சுதாகா், வேளாண் உதவி இயக்குநா் ஜானகி, துணை வேளாண் அலுவலா் மணவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.