முகப்பு
சேலம்

சேலத்தில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Updated On : 12 மே 2026, 12:07 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் தேநீா் கடையில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

அன்னதானப்பட்டி சண்முகாநகா் மின்சார அலுவலகம் அருகே திங்கள்கிழமை காலை 55 வயது மதிக்கத்தக்க நபா் அருகில் உள்ள தேநீா்க் கடைக்கு வந்துள்ளாா். அவா் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தாா்.

உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அந்த நபா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

மேலும், மயங்கி விழுந்த நபா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.