முகப்பு
சேலம்

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 13 மே 2026, 2:19 am IST
பகிர்:

தம்மம்பட்டி சந்தைக்கு அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக முதல்வா் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்குள் காய்கறிச் சந்தை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

இப்பகுதி வழியாக அதாவது டாஸ்மாக் கடை வழியாக ஜங்கமசமுத்திரம், குட்டிக்கரடு, மாவாறு, பெரப்பன்சோலை, கொல்லிமலைக்குச் செல்வோா் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். பெண்கள், பள்ளி மாணவிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டியுள்ளதால் இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement