சங்கடஹர சதுர்த்தி பூஜை
பழனியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
பழனியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
பழனி சண்முகபுரம் சித்திவினாயகர் கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மஹா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
இதே போல ரயிலடி பிரசன்ன விநாயகர் கோயில், மார்க்கெட் பட்டத்துவிநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடசதுர்த்தி கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.