தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கக் கூட்டம்
பழனியை அடுத்த அமரபூண்டியில், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனியை அடுத்த அமரபூண்டியில், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமரபூண்டி சாக்ரடீஸ் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சாயிசாபானு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் நிறுவனர் சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் ராம மோகன ராவ் கூறியிருப்பது தவறாக இருப்பதால் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியரை உடனடியாக கைது செய்து, சிபிசிஐடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் ஓபுராய்மாலி வரவேற்றார்.