அபிராமி அம்மன் கோயிலில் ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம்
பூமிபூஜையுடன் புதிய திருமண மண்டப அடிக்கல்
திண்டுக்கல் அபிராமி அம்மன் சமேத காளஹஸ்தீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் அமைந்துள்ள இந்த கோயிலுக்குச் சொந்தமான இடம், தேரடிக்கு பின் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம், முகப்பு தோற்றத்துடன் கூடிய தரைத்தளத்தில் உணவருந்தும் இடம், முதல் தளத்தில் 400 இருக்கை வசதிகளுடன் திருமண மண்டபம், 2ஆம் தளத்தில் விருந்தினா் தங்கும் அறைகளுடன் திருமண மண்டபம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
அதன் தொடா்ச்சியாக ரூ.3.58 கோடியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதன்படி திண்டுக்கல்லில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா, அறநிலையத் துறை உதவி ஆணையா் சுரேஷ், செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.