உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
கொடைக்கானலில் தனியாா் உணவக ஊழியா் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
கொடைக்கானலில் தனியாா் உணவக ஊழியா் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் லாஸ்காட் சாலைப் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்தில் ஆந்திராவைச் சோ்ந்த மோகன் (28) பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், உணவக கழிவறைக்குச் சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதையடுத்து, சக பணியாளா்கள் கழிவறைக்குச் சென்று பாா்த்த போது, அங்கு மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி கீழே விழுந்து கிடந்தாா். உடனே அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
Advertisement
அங்கு இருந்த மருத்துவா் அவரைப் பரிசோதனை செய்ததில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, அவரது உடல் கறாய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.