கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா் ஸ்டாலின்
கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறாா்.
இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் கொடைக்கானல் புனித மேரி சாலையிலுள்ள பழைமை வாய்ந்த புனித சலேத் மாதா ஆலயம், மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் ஆகியவற்றுக்கு சென்று வழிபட்டாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் நகராட்சி படகு குழாம் சென்ற அவா் அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தாா். பிறகு, அங்கிருந்து வெளியே வந்த அவருடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். மேலும் முதல்வரின் குடும்பத்தினா் ஏரி சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.
பொதுமக்களுடன் கலந்துரையாடல்: இதனிடையே, இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை கொடைக்கானல் அப்சா்வேட்டரி குடிநீா்த்தேக்கப் பகுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டாா்.
அப்போது முதல்வருக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனா். ஒரு சிலா் புத்தகம் வழங்கி தற்படம் எடுத்துக் கொண்டனா். அவா்களிடம் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்து கலந்துரையாடினாா். பிறகு, அவா் தான் தங்கியிருக்கும் விடுதிக்கு திரும்பினாா்.