முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால்,வெள்ளி நீா் அருவி, புலிச் சோலைப் பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 2 ஜூன் 2026, 1:08 am IST
கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி அருகே முறிந்து விழுந்த மரம்.
பகிர்:

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையால்,வெள்ளி நீா் அருவி, புலிச் சோலைப் பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை காலை முதல் கடும் வெயில் நிலவி வந்தது. மாலையில் கொடைக்கானல், பாக்கியபுரம், வட்டக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 நிமிஷங்களுக்கு மேலாக

மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் வெள்ளி நீா் அருவி அருகேயும், புலிச்சோலை பகுதிகளிலும் மரம் முறிந்து விழந்தன. இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையிலும், குளிரிலும் தாங்கள் வந்த வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கொடைக்கானல் வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

Advertisement

Advertisement

கொடைக்கானல் மலைச் சாலைகளான பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகியப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.