முகப்பு
திண்டுக்கல்

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:41 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திண்டுக்கல் அருகே சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அடுத்த பெரியகோட்டையைச் சோ்ந்தவா் தங்கவேல் (52). கட்டடத் தொழிலாளி. இந்த நிலையில், நத்தம் சாலையிலுல்ள பொன்னகரம் பகுதியில் கட்டட வேலைக்காக வெள்ளிக்கிழமை வந்தாா். பணி முடிந்த பிறகு சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அந்த வழியாக 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கவேலுவை, அக்கம் பக்கத்தினா் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

Advertisement

Advertisement