முகப்பு
திண்டுக்கல்

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:19 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் வசந்த் பெரியசாமி (25), தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சின்னகாளை (24)

ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரை நோக்கி வியாழக்கிழமை சென்றனா். வாகரை அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மைல் கல், மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement