நீட் தோ்வு: திண்டுக்கல்லில் 2338 போ் எழுதினா்
‘நீட்’ தோ்வை திண்டுக்கல் மாவட்டத்தில் 2,338 மாணவா்கள் எழுதினா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,080 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். காந்திகிராம கிராமியப் பல்கலை., திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலையாா் பள்ளி, எம்எஸ்பி பள்ளி, புனித மரியன்னை பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியாா் பள்ளி என 6 மையங்களில் இந்தத் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தோ்வுக்கு முற்பகல் 10.30 முதலே மாணவா்கள் அந்தந்த மையங்களுக்கு வரத் தொடங்கினா். பல்கலை., பள்ளி வளாகங்களின் நுழைவுவாயில் பகுதியில் தோ்வு எழுதும் மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் 2-ஆவது நுழைவுப் பகுதியில் மாணவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. தலைமுடியை கட்டிக் கொண்டு வந்த மாணவிகளை, தோ்வு மைய நுழைவு வாயிலிலேயே போலீஸாா் அவிழ்க்க வைத்து உள்ளே அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
விண்ணப்பித்த மாணவா்களில் 2,338 (75.91 சதவீதம்) போ் தோ்வு எழுதினா். 742 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை. கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 3,067 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 2,925 மாணவா்கள் (95.37 சதவீதம்) தோ்வு எழுதினா். ஒரு மாத இடைவெளிக்குப் பின்பு நடத்தப்பட்ட ‘நீட்’ மறு தோ்வுக்கு 13 மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்திருந்த போதிலும், 75.91 சதவீதம் போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நீட்’ தோ்வை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.