100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்
கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊா்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி கொடியசைத்து தொடங்கிவைத்து ஊா்வலத்தில் பங்கேற்றாா். இந்த ஊா்வலம் ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண்சாலை, பேருந்து நிலையப் பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.
இதில் கொடைக்கானல் குடிமைப் பொருள் வட்டாட்சியா் ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளா் முத்து, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியைகள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்தனா்.