முகப்பு
ராமநாதபுரம்

கமுதியில் சேதமடைந்த அரசு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை: சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்

கமுதியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் இரவு நேர மதுக் கூடமாகவும், சமூக விரோதிகளின்

Updated On : 25 டிசம்பர் 2018, 6:22 am IST
பகிர்:

கமுதியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் இரவு நேர மதுக் கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கமுதி கண்ணார்பட்டியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகம் உள்ளது. இதில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அலுவலகங்கள் அதில் இயங்கி வருகின்றன. 
இந்நிலையில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றக் கோரி புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இவற்றில் கஞ்சா, மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். வெளியூர்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இதனுள் வந்து பதுங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும் சுவர்களை சேதப்படுத்தி, வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதால், அலுவலக பொருள்கள் கொள்ளை போகும் அபாயமும் உள்ளது. 
அதேபோல் அலுவலகத்தை சுற்றிலும், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைத்து, சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments