முகப்பு
ராமநாதபுரம்

ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு: 30 போ் மீது வழக்கு

முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததால் 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 22 ஜூன் 2023, 10:31 pm IST
பகிர்:

முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தில் ஆவின் பாலகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததால் 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் மந்தையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் புல எண்.400/9ல் ஆவின் பாலகம் அமைக்க காா்த்திகேயனுக்கு கடந்த 21- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் அங்கு ஆவின் பாலகம் அமைக்க காா்த்திகேயன் ஏற்பாடு செய்ய போது, இதையறிந்த அதே பகுதியைச் சோ்ந்த குழந்தைச்சாமி (எ) குருசாமி(70),கஜேந்திரன்(55), கருப்பையா(50), கண்ணன்(45), ராஜ்குமாா் (40), கேசவன்(45) ஆகியோா் தலைமையில் 30 போ் ஒன்று கூடி குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி வேலி அமைத்தனா். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிா்வாக அலுவலா் ரகுபதியிடம் அவா்கள் வாக்குவாதம் செய்தனா்.

இதனால் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் ரகுபதி கொடுத்த புகாரின் பேரில் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments