பரமக்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நக்கீரா் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (63). இவரது சகோதரா் வீரக்குமாா் (60) மனைவியை விட்டுப் பிரிந்து, அந்தப் பகுதியில் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்தாா். இவா் கடந்த சில தினங்களாக மனம் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாா். இந்த நிலையில், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.