முகப்பு
ராமநாதபுரம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:53 AM
திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி காலை, இரவு கேடகம், பல்லக்கு, பூதம், அன்னம், நந்தி, சிம்மம், வெட்டும் குதிரை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

முன்னதாக, அம்மன், சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனா். பிற்பகல் சன்னிதானத்தை தோ் வந்தடைந்தது.

பின்னா், அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.