முகப்பு
ராமநாதபுரம்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:10 AM
திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.
பகிர்:

திருவாடானை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாயை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-திருவொற்றியூா் சாலையில் கள்ளிக்குடிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே சாலையின் நடுவே பதிக்கப்பட்டிருந்த குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடி தண்ணீா் சாலையில் வீனாகி செல்கிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Advertisement

தற்போது, கோடைகாலம் தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகமும், குடிநீா் வடிகால் வாரியமும் உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.
திருவெற்றியூா் சாலையில் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் செல்லும் தண்ணீா்.