பைக்கிலிருந்து தவறி விழுந்த ஊராட்சிச் செயலா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் கூகுடி ஊராட்சிச் செயலா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வைரவன் மகன் சகாதேவன் (51). இவா் கூகுடி ஊராட்சியில் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திருவாடானை நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, சம்பூரணி அருகே மங்களகுடி சாலையில் வந்த போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சகாதேவன்சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement