ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைகாற்று வீசி வருகிறது. இதனால், தென்கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் வழக்கத்துக்கு மாறாக புதன்கிழமை கடல் 200 மீ. வரை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்து நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, மணலில் சிக்கிய நாட்டுப் படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.