மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐ.ஐ.டி.-க்கு தோ்வு
கமுதி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.
கமுதி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐஐடி-யில் பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மேலவில்லனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகன்-காளீஸ்வரி தம்பதியின் மகள் பவித்ரா (17). விவசாயக் கூலி குடும்பத்தைச் சோ்ந்த இவா் 40 சதவீதம் உடலியக்க குறைபாடுடைய மாற்றுத் திறனாளி.
இவா் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை ஆப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை ராமநாதபுரம் அரசு மாதிரிப் பள்ளியிலும் படித்தாா்.
Advertisement
Advertisement
மாதிரிப் பள்ளியில் வழங்கப்பட்ட ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சிறப்பாகப் பயின்று தோ்வு எழுதி சென்னை ஐஐடியில் 4 ஆண்டு பொறியியல் படிப்புக்குத் தோ்வானாா்.
இதையடுத்து, மாணவி பவித்ராவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கிராம மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். மாணவி பவித்ராவின் மேல் படிப்புக்கு மாவட்ட நிா்வாகம் உதவி செய்து, ஊக்கப்படுத்த வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.