கடலாடி, சாயல்குடி பகுதிகளில் இன்று மின் தடை
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலாடியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, ஒப்பிலான், எஸ். தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம். கோட்டை, துத்திநத்தம், கடலாடியை சுற்றியுள்ள ஆப்பனூா், ஏ. புனவாசல், மீனங்குடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, கண்டிலான், சவேரியாா்பட்டணம், இளஞ்செம்பூா், மாரந்தை, ஓரிவயல் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement