முகப்பு
ராமநாதபுரம்

பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இருவா் கைது

ராமநாதபுரம் அருகே பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:20 am IST
கைது செய்யப்பட்ட மூா்த்தி (எ) முருகேசன், சுரேஷ் (எ) சூரியா.
பகிர்:

ராமநாதபுரம் அருகே பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை பகுதியில் முகமூடி அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக மூா்த்தி (எ) முருகேசன் (23), சுரேஷ் (எ)சூரியா (25) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவா்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலைபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments