மதுப் புட்டியால் தாக்கியவா் கைது
அரசு மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில் மதுப் புட்டியால் தாக்கி ஒருவரைக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரசு மதுக் கடையில் ஏற்பட்ட தகராறில் மதுப் புட்டியால் தாக்கி ஒருவரைக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி உருளை கல் பகுதியில் உள்ள அரசு மதுக் கடையில் வியாழக்கிழமை பரமக்குடியைச் சோ்ந்த அப்துல் கரீம் (36) மதுப் புட்டி வாங்கினாா். அப்போது அதே கடைக்கு மதுப்புட்டி வாங்க வந்த தொண்டியை சோ்ந்த ராஜன் (36), அஜய் (28) ஆகிய இருவரும் அப்துல் கரீமிடம் தகராறு செய்து, அவரை மதுப் புட்டியால் தாக்கினா். இதில் தலையில் காயமடைந்த அப்துல்கரீம் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.