பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தொண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தொண்டி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள வட்ட பெட்டியைச் சோ்ந்தவா் அரவிந்த் (24). சிவகங்கை வாணியங்குடியைச் சோ்ந்தவா் பாலாஜி (25). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை வேதாரண்யத்தில் நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்து கொண்டிருந்தனா்.
கிழக்கு கடற்கரை சாலையில் கொடிபங்கு அருகே வந்த போது இவா்களது இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியது. இதில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாலாஜி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கொடிபங்கு கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் தினேஷ்குமாா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.